மாவீரர்களே!

மாவீரர்களே !
உங்களின் கல்லறைகளில்
தமிழினம் தலை நிமிர்ந்து நிற்கிறது
வீரம் செறிந்தவன் தமிழன் என்று
உலகம் உணரச் செய்ததால்
உங்களின் கனவு நிச்சயம் நனவாகும்
அதற்கான நாட்களை மட்டும்
நாங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறோம்
உங்களைப் பெற்ற அன்னையர்
தம் மக்களை சான்றோர் எனக் கேட்ட
ஆர்ப்பா¤ப்பில்
வீரத்திலகங்களே !
நீங்கள் மரணித்தவர்கள் அல்ல
மானமுள்ள ஒவ்வொரு தமிழனுக்குள்ளும்
மரணித்து வாழ்பவர்கள்

எழுதியவர் : (5-Dec-09, 2:49 pm)
சேர்த்தது : nirmala
பார்வை : 785

மேலே