செவ்வகத்திப்பூ - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
நாடிற் பணிப்பீணி நாசிக் கறைக்கதழ்வை
யோடித் துடைத்துள் ளொளியாற்றும் - பாடெத்
தவரகத்தி னுந்துனங்கைத் தண்டா மயிலே
துவரகத்தி பூண்காண் துதி
- பதார்த்த குண சிந்தாமணி
செவ்வகத்திப் பூவினால் நாசியில் ஏற்படும் இரத்தப் பெருக்கு விரைவில் நின்றுவிடும்; உடல் வெப்பம் நீங்கும்; பித்தமயக்கத்தை வேரறுக்கச் செய்யும்