மௌனம்
மனதில் பட்டதை வெளிபடையாக சொல்லிவிடும் குணம் எல்லோருக்கும்
இருப்பதில்லை..
உள்ளத்தில் புறப்பட்டு சொல்ல முடியாமல் உதட்டினில்
முடிந்துவிட்ட வார்த்தைகள் ஏராளம்
சொன்னாலும் சொல்லாமல் விட்டாலும் சண்டையிடும் உறவுகளும் தாராளம்
மவுனமாக இருந்தாலும் அதற்கும் ஆயிரம் காரணம் சொல்லும் அறிவிலிகளும் உண்டு
எது எப்படியோ..
பெரும்பாலும் நமது மவுனம் தவறாகவே மொழிபெயர்க்கப்படுகிறது....