அன்பு நட்ராஜ் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : அன்பு நட்ராஜ் |
இடம் | : |
பிறந்த தேதி | : 14-Jul-2001 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Feb-2022 |
பார்த்தவர்கள் | : 18 |
புள்ளி | : 4 |
தூக்கமே வராத துரதிர்ஷ்ட இரவில்
கண் அசர்ந்து கனா காணும் போது
கதிரவனின் கூர் தீட்டிய கதிர்கள்
கண்ணாடி ஜன்னலையும் துளைத்து
கானும் கனவினில் கல்லெறிந்து களைக்கிறது.
மனதில் பட்டதை வெளிபடையாக சொல்லிவிடும் குணம் எல்லோருக்கும்
இருப்பதில்லை..
உள்ளத்தில் புறப்பட்டு சொல்ல முடியாமல் உதட்டினில்
முடிந்துவிட்ட வார்த்தைகள் ஏராளம்
சொன்னாலும் சொல்லாமல் விட்டாலும் சண்டையிடும் உறவுகளும் தாராளம்
மவுனமாக இருந்தாலும் அதற்கும் ஆயிரம் காரணம் சொல்லும் அறிவிலிகளும் உண்டு
எது எப்படியோ..
பெரும்பாலும் நமது மவுனம் தவறாகவே மொழிபெயர்க்கப்படுகிறது....
ஒரு கார்கால காலைப் பொழுதில் காப்பி குவளையை கையில் ஏந்தி சாரல் மழையின் அழகை ரசித்ததுண்டா?
ஈரமான காற்றுக்கு இதமாக
உதட்டிற்கு மிதமாக
மனத்திற்கு ரிதமூட்டும்
உணர்வை ரசித்துண்டா?
மனதின் உணர்வுகள் யாவையும்
உள்ளங்கையில் காட்டும்
உணர்வு அது
ரொட்டித்துண்டை நனைத்து வாயருகே
கொண்டு வரும் போது தவறவிட்டதுண்டா?
வாழ்க்கையும் அப்படிதான்
வாய்ப்புகள் யாவும் ரொட்டித்துண்டை போல வாயருகே வந்ததாலும்
லட்சியத்தில் கொண்ட அலட்சியத்தால் தவறவிடுகின்றோம்
விழுந்த துண்டுகள் யாவும்
வீணாகி போனவை என
விட்டெரியுங்கள்.
காபிக் கோப்பையை முத்தமுடுங்கள்.
காதலையும் காலத்தையும் கடந்த உணர்விது உணருங்கள்.
லட்சியம் எனும்
காப
வெள்ளால மரத்தினவன் வீற்றிருப்பான்
சொல்லாலும் உள்ளத்திலே
உறைந்திருப்பான்
மாமுனிக்கு மத்தியஸ்தம் செய்த
மதியுடையான்
எமையாளும் உமையாளும்
ஈசனவன்
பரக்கலக்கோட்டை யாளும்
பரமன் பாதம் சேர்வனே...!
🙏🕉️🙏