கார்கால காலைப்பொழுது

ஒரு கார்கால காலைப் பொழுதில் காப்பி குவளையை கையில் ஏந்தி சாரல் மழையின் அழகை ரசித்ததுண்டா?

ஈரமான காற்றுக்கு இதமாக
உதட்டிற்கு மிதமாக
மனத்திற்கு ரிதமூட்டும்
உணர்வை ரசித்துண்டா?

மனதின் உணர்வுகள் யாவையும்
உள்ளங்கையில் காட்டும்
உணர்வு அது

ரொட்டித்துண்டை நனைத்து வாயருகே
கொண்டு வரும் போது தவறவிட்டதுண்டா?
வாழ்க்கையும் அப்படிதான்

வாய்ப்புகள் யாவும் ரொட்டித்துண்டை போல வாயருகே வந்ததாலும்
லட்சியத்தில் கொண்ட அலட்சியத்தால் தவறவிடுகின்றோம்

விழுந்த துண்டுகள் யாவும்
வீணாகி போனவை என
விட்டெரியுங்கள்.
காபிக் கோப்பையை முத்தமுடுங்கள்.

காதலையும் காலத்தையும் கடந்த உணர்விது உணருங்கள்.
லட்சியம் எனும்
காபிக்கோப்பையை முத்தமுடுங்கள்...!

எழுதியவர் : அன்பு நட்ராஜ் (1-Feb-22, 8:03 pm)
சேர்த்தது : அன்பு நட்ராஜ்
பார்வை : 66

மேலே