அப்பனுக்கும் உண்டு
அப்பனுக்கும் உண்டு...
வா தாயே வா!
வந்தாய் ,
காலம் கடந்தே
வந்தாய்!
வந்ததும் நீ
போவது முறையோ?
வந்திட்டாய்,
வந்த நீ
உன் புகழ் பாடும்,
என் கவிதைகளையும்
எடுத்துச் செல்.
சென்றே நீ !
உன்னவன்
என் அப்பன் ,
கேட்க உரக்கவே
படித்து விடு.
அப்பன் அவன்,
அதை கேட்டே முகம்
சுளித்திடுவான்!
சொல் அவனிடம்!
என் உள்ளத்தில்
வந்து அமரச் சொல்,
அவனுக்கும் உண்டு
என்னிடம்,
அவன் புகழ் பாடும் கவிதைகள் பல.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.