மடு - குளம் - ஏரி இவைகளிலுள்ள மீன்கறி - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
ஓதுமடு மீனால் உலவைபித் தங்களறுந்
தாதுமே கங்கபமந் தங்களுண்டாங் – கோதி(ல்)குளம்
ஆருமீன் றன்னால் அழற்பிணிமந் தந்தீரும்
ஏரிமீன் மேகமடும் எண்
- பதார்த்த குண சிந்தாமணி
மடுமீன் வாயுவையும் பித்தத்தையும் போக்கும்; சுக்கிலம், பிரமேகம், சிலேட்டுமம், அக்கினி மாந்தம் இவற்றை உண்டாக்கும்; குளத்து மீன் உண்டால் சுரம், அழற்பிணி, மந்தம் நீங்கும்; ஏரி மீனால்
பிரமேகம் நீங்கும்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
