பாவாணர் 1
பாவாணர் பாதையில் படிந்து சென்றால்
பற்றற்ற தமிழினமும் பற்றுக் கொள்ளும்
பாவமுதை தேடிச்சென்றால் தமிழர் வாழ்வில்
பண்பாட்டு வளர்ச்சிதங்கை வளர்ந்து நிற்கும்
நாவினிலே நற்றமிழும் நடந்து வாழும்
பலமிக்க தமிழினமும் வளர்ந்து ஓங்கும்
தேவமிர்த பானமாக என்றும் கிட்டும்
தென்தமிழர் நாட்டினிலே வியந்து நிற்க்கும்
தனித் தமிழின் சான்றோரால் தழைத்த தம்மின்
தனித் தமிழின் வேர்களையே தம்மில் கண்டு
இனிப்பான செய்தியெல்லாம் இனமுகத் தோடு
இடர் கொண்டு எழுதிட்ட எத்தனை நூற்கள்
தனித்துவத்தின் ஆய்வினாலே தமிழை ஆய்ந்து
தன்மான தமிழனாக தனித்தே நின்று
தனித்தமிழை இயல்பாக்கி தமிழன்க்ஷகற்க
பாங்குடனே வளியிட்ட பான்மை
முதல்மாந்தன் பிறந்தயிடம் குமரி ஒன்றே
முழக்கத்தை முன்வைத்து மொழிந்த தாலே
உதயத்தின் உறுதியோடு உணர்த்திய ஞாயிறு
உலகெங்கும் வேர்விட்ட தமிழ் சாறு
இதமுடனே இருக்கின்ற மொழியை யொல்லாம்
முழுமையாய் ஆய்ந்துகன்ற அறிவுச் சான்றோன்
இதயத்தில் ஏற்றிவைத்த தமிழை எல்லாம்
இம்மண்ணுக் குரியதென்று உண்மை சொன்னார்
பைந்ததமிழை ஆய்ந்தாய்ந்து அறிவைக் கொண்டு
பைந்ததமிழே அகிலத்திற்கு முதன்மொழி என்றார்
நைந்திட்ட மொழிகளெல்லாம் நாட்டில் இன்று
நலிவுற்று பேச்சற்று நைந்து நிற்க
ஐந்நதுநிலம் கொண்டொளிரும் தமிழன் சொல்லும்
அனைத்துலக மொழிகளிலே கலந்து நின்று
பைந்தமிழாய் பசுமையாய் பாங்குடன் நின்று
பாரெங்கும் ஒளிவீசிடும் பைந்தமிழ் பாரீர்
எண்தாண்டில்இறுதியினை கண்டார் என்றால்
ஐம்பதாண்டு ஆய்வினிலே தமிழ்ப்பணி கொண்டார்
பன்முகத்து பாவாணர் பாடாற் றியத்தால்
பழந்தமிழன் வாழ்வினையின் உயார்வைச் சொல்லி
ஏற்றமிடும் தமிழனாக இயங்க உரைத்தார்
தனித்தமிழை வளர்த்திட்டார் தமிழைக் காக்க
தாங்கொணா துயரத்தில் தமிழைக் காத்தார்
அவர் தான் பைந்தமிழ் பாவாணர்
வழிநெடுக தமிழை வாழ் வைத்த
ஞாயிறு ஆவார் மொழி ஞாயிறு அவர்