புறப்பகை கோடியின் மிக்குறினும் அஞ்சார் அகப்பகை ஒன்றஞ்சிக் காப்ப – நீதிநெறி விளக்கம் 55
இன்னிசை வெண்பா
புறப்பகை கோடியின் மிக்குறினும் அஞ்சார்
அகப்பகை ஒன்றஞ்சிக் காப்ப - அனைத்துலகும்
சொல்லொன்றின் யாப்பர் பரிந்தோம்பிக் காப்பவே
பல்காலுங் காமப் பகை 55
- நீதிநெறி விளக்கம்
பொருளுரை:
உலகம் முழுமையும் (தமது) ஒரு வார்த்தையினாலே வயப்படுத்தக்கூடிய முனிவர் பன் முறையும் காமமாகிய உட்பகையை மிகுதியும் வருந்தியும் காவல் செய்வார்;
அதுபோல், அறிவுடையார் வெளிப்பகை கோடிக்கு மேல் அதிகமாய் இருந்தாலும் (அதற்காக) அஞ்சாமல் உட்பகை ஒன்றேயானாலும் (அதன் துன்பம் பெரிதாகையால்) அதனை அஞ்சிக் காவல் செய்வர்.
கருத்து:
புறப்பகைவரை விட அகப்பகைவர்க்கு அஞ்சுதல் வேண்டும்.