நிறையட்டும் சந்தோசம் வாழ்வில்
உக்ரைனில் நடக்குது இப்போ
உக்கிரமான போர்...
உலகெல்லாம் மூழ்கியது கண்ணீரில்.
வேண்டுமா இந்த போர்....?
வல்லரசுகளின் ஆணவ வெறிக்கு
பலியாகிறது அப்பாவிகளின் உயிர்....
உயிர்.....!
நம்மால் திருப்பி கொடுக்க முடியுமா?
புதிதாய் உருவாக்கி மகிழத்தான் முடியுமா?
முடியாது....முடியாது...
தெரியும். தெரிந்தும்
கண்ணை மறைத்தது ஆணவம்.
வெடித்து சிதறியது மனிதர்களின் பிணம்.
ரத்தம்....அழுகை....மரணம்...
பயம்....ஓலம்....சேதாரம்...
பைத்தியம் பிடித்து விடுகிறதே...
பைத்தியம் பிடித்த இந்த வெறிச்செயலால்
போரை உடனே நிறுத்து
மனிதனை மனிதனாய் நினை...
மனிதன்தானே நீயும்.
எங்கே போயிற்று மதம்?
எங்கே போயிற்று மனிதாபிமானம்?
நமக்காக சுமந்தாரே சிலுவையை......
மறுபடியும்....மறுபடியும்.....சிலுவையை
ஏற்றுகிறோமே அவர் தோளில்......
விடியுமா நம் பொழுது?
கரையுமா நம் பாவம்?
சமாதானம் பிறக்கட்டும் - சக மனித
சமத்துவம் செழிக்கட்டும்.
நிறையட்டும் சந்தோசம் வாழ்வில்.