ஏங்குதே எந்தன் நெஞ்சம்

கடைக்கண் பார்வையாலே
கட்டியிழுக்கும் பெண்ணே/

உந்தன் பெயரை
பூட்டிவைத்திட
காத்திருக்குதடி
எந்தன் நெஞ்சம்/
கொஞ்சம்
சொல்லிவிட்டுச் செல்லேனடி
என் செல்ல மயிலே/

மையிட்ட உந்தன்
இருவிழி கருவிழியின்
கடைக்கண் பார்வையால்/
கரைந்து வந்து சேருதடி
எந்தன் உயிர்
உந்தன் மடிதனிலே/

உன் மடிதனிலே
வந்தமர்ந்த
என் நெஞ்சமதை
பூட்டிவைப்பாயா?
இல்லை
உந்தன் கடைக்கண்
பார்வையாலேயே
கொல்வாயா?

பதில் சொல்லிச் செல்லேனடி
என் கடைக்கண் அழகியே
ஏங்கித் தவிக்குதே
எந்தன் நெஞ்சம்

இவள்
எண்ணங்களின்
எழுத்தழகி
அறூபா அஹ்லா

எழுதியவர் : அறூபா அஹ்லா (25-Apr-22, 8:20 pm)
சேர்த்தது : அறூபா அஹ்லா
பார்வை : 177

மேலே