அறூபா அஹ்லா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : அறூபா அஹ்லா |
இடம் | : இலங்கை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 30-Mar-2022 |
பார்த்தவர்கள் | : 185 |
புள்ளி | : 40 |
சமூகப் பிராணியான எமக்கு ஒவ்வொரு உறவுகளும் முக்கியம் தான். ஏதோ ஒரு வகையில் அவர்களுடன் உணர்வு ரீதியான பிணைப்பு இருக்கத்தான் செய்கின்றது. அருகினில் எத்தனை உறவுகள் இருந்தாலும் சரி, தொலைவினில் எமக்காய் எத்தனை உறவுகள் இருந்தாலும் சரி, தந்தை என்ற உறவு இல்லையென்றால் அந்த வெற்றிடம் என்றுமே வெறுமை தான்... மீள் நிரப்பிடவே இயலாத ஒன்று தான்...
அவருடன் மகிழ்ந்திருப்போம்…
முறைத்துக்கொண்டு திரிந்திருப்போம்…
சண்டையிட்டு சமாதானமாகிருப்போம்…
வாக்குவாதங்களுடன் கடந்திருப்போம்…
ஏட்டிக்குப் போட்டியாய் நடந்திருப்போம்…
அவருக்குப் பிடிக்காததை செய்திட முனைந்திருப்போம்…
பிடிவாதமாய் ஒற்றைக் காலிலே நின்றிருப்போம்
வாழ்க்கை தரும் வலிகள்
நம்மை கண்ணீர் சிந்த வைக்கின்றன…
நம்மை முடங்கச் செய்துவிடுகின்றன…
நம்மை அழுத்தத்திற்குள்ளே
மூழ்கடிக்கச் செய்துவிடுன்றன…
நம்மை துவளச் செய்துவிடுகின்றன…
நம்மை கோழையாக்கிவிடுகின்றன…
இன்னும் அதே வலிகள் தான்
நம்மை முன்னோக்கி
நகர்ந்திடச் செய்கின்றன…
நம்மை மீண்டெழ வைக்கின்றன…
நம்மை நமக்கே
புரிந்துகொள்ள வைக்கின்றன…
நம்மை எட்டி நடை போட வைக்கின்றன…
நம்மை சாதித்திட வேண்டுமென்ற
வைராக்கியத்தை விதைக்கின்றன…
வாழ்க்கை தரும் வலிகளை சிறுது நேரம் அழுது கழித்துவிட்டு அடுத்த எட்டுக்களை எடுத்து நகர்ந்தால் பின்நாளில் அழுது கழித்த நேரம் கூட வீணாய்த் தான் தோன்றும்...
வா
கஷ்டப்பட்டு கட்டிய
என் சிறு கூடு
காற்றடித்து
கீழே சிதைகையிலே
கவலை கொண்டு
சிறகொடிந்து
விடுவதில்லை நான்...
தேடியலைந்து
குச்சிகள் பொறுக்கியெடுத்து
புதிய கிளையினிலே
புதிய கூட்டினையே
புதிதாய் கட்டியே
குடி புகுவேன் நான்...
சிறு பறவை நானே
சிறகொடிந்து
சிதறிப் போகாமல்
புதிதாய் துவங்குகையில்
உனக்கெதுக்கு தளரல்கள்?
துவளாது துணிந்தே செல்...
இவள்
எண்ணங்களின் எழுத்தழகி
அறூபா அஹ்லா
துன்பத்திலே துயிலும் தோழா/
இன்பம் வரும் தளராதே/
கரு மேகமும்
வென் மேகமாகிறதே/
இருள் மறைந்து
விடியலும் பிறக்கிறதே/
விழி மூடினாலே
வழி மறைக்கிறதே இருட்டு/
விழி திறந்து பார்
வழி பிறக்குமே
விரைவிலே/
இருள் மறைகிறதே படிப்படியாய்
ஒளி வந்து படுகையிலே/
உன் இருள் நீங்கிடவே
உழைத்திடு அயராமலே/
விடியும் விடியலும்
நமக்கானதாய் மாறிடுமே/
விடியல் வர சுழல்கிறதே பூமி/
உன் விடியல் வர
தயங்கி நிற்காதே நீ/
விடியும் பொழுதோ
நமக்கானதாய் மாறிட
நாளும் நீ உழைத்திட வேண்டுமே/
சிறு சிறு சேமிப்போ
பெரும் பயன் தருமே/
உன் சிறு சிறு முயற்சிகளோ
விடியும் பொழுதை
உறக்கானதாய் மாற்றிடுமே/
காலில் மண் பட்டால்
தட்டிவிட்டு எழுகின்றோம்...
சேற்றில் கால் பட்டால்
உடனே கழுவிவிட்டே
நகர்கின்றோம்...
காலில் முள் குத்தினால்
உடனே அதனை எடுத்துவிடவே
முனைகின்றோம்...
அடிபட்ட காலுக்கோ
உடனே அதற்கான வைத்தியத்தைப்
பார்த்துவிடுகின்றோம்...
மண்ணை தட்டிவிடாவிட்டால் குத்திக்கொண்டே அசௌகரியத்தை தந்து கொண்டிருக்கும் என்பதால் தட்டிவிடுகின்றோம்...புத்திசாலித்தனம் தான்...
சேற்றை அகற்றாவிட்டால் அதன் நாற்றம் நம்மிலும் தொற்றி அருவருப்பினை உண்டாக்கிக்கொண்டிருக்கும் என்பதால் உடனே கழுவிவிடுகின்றோம்...
புத்திசாலித்தனம் தான்...
காலில் குத்திய முள் வலியை தந்த உடனே வலியகற்ற அதனை எடுத்துவிட
காலில் மண் பட்டால்
தட்டிவிட்டு எழுகின்றோம்...
சேற்றில் கால் பட்டால்
உடனே கழுவிவிட்டே
நகர்கின்றோம்...
காலில் முள் குத்தினால்
உடனே அதனை எடுத்துவிடவே
முனைகின்றோம்...
அடிபட்ட காலுக்கோ
உடனே அதற்கான வைத்தியத்தைப்
பார்த்துவிடுகின்றோம்...
மண்ணை தட்டிவிடாவிட்டால் குத்திக்கொண்டே அசௌகரியத்தை தந்து கொண்டிருக்கும் என்பதால் தட்டிவிடுகின்றோம்...புத்திசாலித்தனம் தான்...
சேற்றை அகற்றாவிட்டால் அதன் நாற்றம் நம்மிலும் தொற்றி அருவருப்பினை உண்டாக்கிக்கொண்டிருக்கும் என்பதால் உடனே கழுவிவிடுகின்றோம்...
புத்திசாலித்தனம் தான்...
காலில் குத்திய முள் வலியை தந்த உடனே வலியகற்ற அதனை எடுத்துவிட
துன்பத்திலே துயிலும் தோழா/
இன்பம் வரும் தளராதே/
கரு மேகமும்
வென் மேகமாகிறதே/
இருள் மறைந்து
விடியலும் பிறக்கிறதே/
விழி மூடினாலே
வழி மறைக்கிறதே இருட்டு/
விழி திறந்து பார்
வழி பிறக்குமே
விரைவிலே/
இருள் மறைகிறதே படிப்படியாய்
ஒளி வந்து படுகையிலே/
உன் இருள் நீங்கிடவே
உழைத்திடு அயராமலே/
விடியும் விடியலும்
நமக்கானதாய் மாறிடுமே/
விடியல் வர சுழல்கிறதே பூமி/
உன் விடியல் வர
தயங்கி நிற்காதே நீ/
விடியும் பொழுதோ
நமக்கானதாய் மாறிட
நாளும் நீ உழைத்திட வேண்டுமே/
சிறு சிறு சேமிப்போ
பெரும் பயன் தருமே/
உன் சிறு சிறு முயற்சிகளோ
விடியும் பொழுதை
உறக்கானதாய் மாற்றிடுமே/இவள்எண்ணங்களின் எழுத்தழகிஅறூபா அஹ்லா
கனாக் காண்கிறாள் முதிர்க்கன்னி
அவளும் சாதாரண பெண் தான். அவளுக்குள்ளும் ஆசைகள் பல உண்டு. ஆனாலும் குடும்ப சூழ்நிலைகளோ தடை போட்டுவிட்டன அவளின் கனாக்களுக்கு. வறுமையின் பிடியிலே அவளின் வாழ்க்கை ஆரம்பமானதற்கு அவள் என்னதான் செய்திட முடியும். அவளும் உயர்ந்திட வேண்டும் என்று ஓடிக்கொண்டு தான் இருக்கிறாள். ஆனாலும் விடியலின் வரவு தான் இன்னும் அவள் அருகிலே வந்திடவில்லை. வயது முப்பது தாண்டிய போதும் குடும்பச் சுமையின் பாரம் குறையாததால் அவளுக்கான மணப்பெண் கனா ஒழிந்து கொண்டிருக்கின்றது. மூத்தவள் இவள் என்பதால் இளையவள்கள் இருவருக்கும் இயன்றவரை இவள் முயன்று கரையேற்றிவிட்டாள். கடைக்குட்டி சிங்கமோ கரையை தாண்டிட