பூக்கள் ஏங்கின

இனிய இதயங்களை
இதயத் தராசில் வைத்தால்...
ஊரும் உலகும் ஈடாகாது...

இதை உணர்ந்து
தேர்ந்த இதயங்களுக்குச்
சொந்தக்காரர்கள்... காதலால்
கசிந்துருகும் லிஜோ... சீமாவிற்கு
இனிய திருமண வாழ்த்துகள்...

பூக்கள் ஏங்கின.. ஒன்றில் ஒன்று
அன்பில் தோய்ந்த லிஜோ.. சீமா
இதயங்கள் அளவிற்கு
மணக்க முடியவில்லையே என்று...

லிஜோ.. சீமா.. பதிவேட்டில்...
நீங்கள் கையொப்பமிட்ட
பேனா கொடுத்து வைத்தது...
உன்னத உள்ளங்கள் இரண்டை
சேர்த்து வைத்ததால்...

பேனாக்கள் முத்தமிட்ட
பதிவேடு கொடுத்து வைத்தது..
பாச இதயங்கள் இரண்டை
இணைத்து வைத்ததால்...

அன்பு... பிரியம்... நேசம்
வார்த்தைகள் சொல்லும்
இனிமையினும் இனிமை
காணும் இளைய உள்ளங்களே..
நீங்கள் வளர வளர
இனிமை இன்னும் வளரும்...

அதில் வசப்படும்
செல்வங்கள் பதினாறும்...
லிஜோ... சீமா...
வசந்த வாழ்த்துகள்...
இனிய திருமண வாழ்த்துகள்...
வாழ்க பல்லாண்டு...
வளங்கள் யாவும் பெற்று...
💐🌹😀🍫👍

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (3-May-22, 7:28 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 386

மேலே