உறவுகள்

உறவுகள்
கடவுளின் வரங்கள்.,
உறவில்லாத உயிர்களின்
வலிகளின் ஆழங்களை யாராலும்
அளந்து சொல்ல முடியாது

பாசமான உறவுகள் வானத்தில் குடியேற்றும்
பாதகமான உறவுகள் பாதாளத்திற்கு குழிபறிக்கும்

துக்கங்களை துடைக்க வேண்டிய உறவுகள்
பல நேரங்களில் தூபம் போடுவதை
வேலையாக்கிக் கொள்கின்றன..

வரவு உள்ள மட்டும்
உறவு கொள்ள இது
வர்த்தகமல்ல வாழ்க்கை

இரத்தத்தின் இரத்தமான பின்
இரத்தத்தை உறிஞ்ச நினைப்பது
பாவத்தின் உச்சம் இதில்
வலிகள் மட்டும் தான் மிச்சம்

கவலைக்கு மருந்து போட உறவு வேண்டும்
மகிழ்ச்சியில் கைகோர்க்க மட்டும்
மனதிற்குள் இடமில்லை..

துக்கத்தின் போது திறக்கப்படும் கதவுகள்
சந்தோசத்தின் போது சாத்திக் கொள்வது
ஏனோ?
.....
பாசம் படர வேண்டிய இடத்தில்
பொறாமை குடியேறி சிரிப்பது
காலத்தின் கொடுமை

சொந்தங்களுடன் சேர்ந்திருந்தால்
ஆயுள் கூடும் என்றார் நபிகள்
ஆயுளைக் கூட்டும் உறவுகளை விட
அழுத்தத்தைக் கூட்டும் உறவுகளே
அதிகம் தற்போது

உள்ளங்களை வார்த்தைகளால் துண்டாடிவிட்டு
உறவு என்று வந்து நிற்பதில்
அர்த்தம் என்ன இருக்கிறது..,
வெளிப்படையில்லா உறவுகளால்
வேதனையே விளைகிறது...

உறவுகளில் அன்பை தேடுவதை விடுத்தது
அன்பால் நிறைந்த உள்ளங்களுக்கு உறவுகளாவோம்
யாதும் ஊரே யாவரும் கேளிர்

அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (9-May-22, 9:08 pm)
சேர்த்தது : kaviraj
Tanglish : uravukal
பார்வை : 181

மேலே