துத்திப் பூ - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
துத்தி மலரைநிதந் துய்க்கின்ற பேர்களுக்கு
மெத்தவிந்து வும்பெருகும் மெய்குளிருஞ் - சத்தியமே
வாயால் விழும்இரத்தம் மாறும் இருமலறும்
தேயா மதிமுகத்தாய் செப்பு
- பதார்த்த குண சிந்தாமணி
இரத்த வாந்தி, காசம், இவற்றை நீக்கி சுக்கில விருத்தியையும் உடல் குளிர்ச்சியையுமுண்டாக்கும் பண்பு துத்திப் பூவிற்குண்டு.