பயற்றங்காய் - நேரிசை வெண்பா
பயற்றங்காய்
நேரிசை வெண்பா
(அ’ய்’ ப’ய்’ – ய் இடையின ஆசு)
ஐயம் அகலும் அரோசிகெடுந் தீபனமாம்
பையுதிர வாய்வும் பறக்குமென்பார் - செய்யும்
நயத்த அவுஷதமும் நாசம் அடையும்
பயற்றங்காய் தன்னையுண்டு பார்
- பதார்த்த குண சிந்தாமணி
இது மருந்தை முறிக்கும்; கபம், சுவையின்மை, இரத்த வாந்தி, குன்மம் இவை நீங்கும்; பசியை உண்டாக்கும்