அழகுமுகத்தில் ஆயிரம் செய்தி

நேரிசை வெண்பா

பளிங்கு மரகத மாணிக்கப் பச்சை
மிளிரு மொளிரும் தெரியும் --. களிக்கும்
புறவண் ணயிழைநூல் கோர்த்தவள் பொற்பும்
புறந்தரும் நல்ல குறிப்பு



பொற்பு =. அழகு

புறந்தரும். பாதுகாத்து தரும்


பட்டைத்தீட்டிய ரெத்தினங்களில் நோக்க வண்ண வண்ண காட்சிகள்
தெரியும் மேலும் அம்மணிகளை கோர்த்த நூலும் வெளிக்காட்டும்
அது போல எனது காதலியின் அழகில் எனக்கென பாதுகாக்கப் பட்ட
செய்தி ஒன்று தெளிவாய் காத்திருக்கும்


காமத்துப்பால். 3/20 குறள்



.........

எழுதியவர் : பழனி ராஜன் (27-May-22, 12:48 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 69

மேலே