எழுந்துவிடு
மயக்கத்திலிருந்து எழுந்துவிடு - மனிதா
எழுந்துவிடு...
கண்முன் நடக்கும் அவலங்களை
தட்டிக்கேட்டுவிடு...தட்டிக்கேட்டுவிடு...
நீ கொடுப்பதால் அவன் வாங்குகிறான்...
அவன் வாங்குவதால் நீ கொடுக்கிறாய்...
நீ கொடுத்து அவனைக் கெடுக்கிறாய்...
அவன் வாங்கி உன்னை கெடுக்கிறான்...
எப்படியோ காரியம் ஆனால் சரி
என்கின்ற மனோபாவம்.
இருவர் மீதும் தவறுண்டு... தம்பி
உன்னால் நான் கெட்டேன்
என்னால் நீ கெட்டாய் - என்று
ஒருவரை ஒருவர் தலையில்
குட்டிக்கொள்ளத்தான் வேண்டும்.
அவனை நிறுத்தச் சொல்லு
நான் நிறுத்துகிறேன்...என்று
ஒருவரை ஒருவர்
குற்றம் சொல்லிக்கொண்டும்...
பழிபோட்டுக்கொண்டும்
காலத்தையும் நம்
எதிர்காலத்தையையும்
புதைத்துக்கொண்டிருக்கிறோம்.
இதில் யாரை குற்றம் சொல்வது?
இதற்கு யார்தான் முற்றுப்புள்ளி வைப்பது?
சிந்தித்து செயல் படு மனிதா
சிந்தித்து செயல் படுத்து.