உந்தன் முன்னழகைப் பார்க்க

நேரிசை வெண்பா

கள்ளால் இழிவுசேரும் ஆயின் வளரும்பார்
கள்குடிக்க வின்பம் அதிகமாய் -- எள்ளுவர்
கள்ளினும் கூட்டலாமுன் மார்பு களித்தவற்கு
உள்ளிடவு மின்பமாம் சொல்




வஞ்சகரே! தன்னை உண்டு மகிழ்ந்தவர்க்கு எளிமை வரத்தக்க தீமையைச் செய்தாலும், அவரால் மேலும் மேலும் விரும்பப்படும் கள்ளைப் போன்றது எனக்கு உன் மார்பு. இத்தனையும் அவளுக்கு மட்டுந்தானா? அவன் எதுவுமே நினைக்கவில்லையா? அவள் நினைவுகளை அவளின் பார்வையிலேயே படித்துவிட்டான்.



காமத்துப் பால் 8/21 வதுக் குறள்

......

எழுதியவர் : பழனி ராஜன் (8-Jun-22, 9:33 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 42

மேலே