மழை

வானில் ஒரு கருமேகக்கூட்டம் ....
அன்னாந்து பாக்கையிலே....
துளி துளியாய் விழுந்தன முத்துக்கள் ….
அவை வெறும் முத்துக்கள் அல்ல ….
வான்மேகத்தின் செல்ல பிள்ளைகள்….
அப் பிள்ளைகளின் பெயர் தான் மழை….
பிள்ளையை பூமி தாயிடம் வர விடாமல் தடுக்கிறான் இடி என்ற எதிரி ....
பூமி தாயிடம் வர விடாமல் தடுக்க காற்று கூட சதி செய்யும் …
அதையும் மீறி அப் பிள்ளை வரும் ….
தாயின் மனதில் உள்ள காயத்தை ஆறாத ரணத்தை ஆற்றவும் ...
மனதையே குளிர வைக்கவும் மழை என்ற பிள்ளையாய்....

எழுதியவர் : பிரியா (25-Jun-22, 3:37 pm)
Tanglish : mazhai
பார்வை : 175

மேலே