வாலையவள் சாலச் சிறந்தவன்னை சாற்று - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
மாலைப் பொழுதெழுதும் மாசிலா ஓவியம்
மேலை இளந்தென்றல் மென்குண - வாலையவள்
நீலவிழிக் காரியிவள் நெஞ்சினில் நிற்பவளே
சாலச் சிறந்தவன்னை சாற்று!
– வ.க.கன்னியப்பன்
குறிப்பு:
ஆதியந்தம் வாலையவள் இருந்த வீடே
ஆச்சரியம் மெத்தமெத்த அதுதான் பாரு! - கருவூர் சித்தர்
9 வயதில் இருந்து பூப்பெய்தாத சிறுமி வயது ரூபமே வாலைக்குமரி!
வாலைக்குமரியாக பருவம் எய்தாத குழந்தை / குமரி - பருவப் பெண்ணாக சித்தர்களுக்கு சக்தியாக இருந்து தமிழ் ஞானம் ஊட்டியவளே தமிழன்னை!