பாவாடைத் தாவணியில் பார்த்த உருவமா

பாவாடைத் தாவணியில் பார்த்த உருவமா !!
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

பாவாடைத் தாவணியில் பார்த்த
உருவமா /
நாவாடி விளையாண்ட நாட்கள்
திரும்புமா /

கூவாத காலமது மீண்டும்
விடியுமா /
கூறாத கதைகளெலாம் கேட்க
முடியுமா /

காக்கைக்கடி கடித்திடவே பற்கள்
துடிக்குதா /
கரும்பலகைக் கவிதைகளில் கண்கள்
பணிக்குதா /

விளையாட்டுத் திடல்களிலே வீரம்
காட்டவா/
களைகட்டும் ஆண்டுவிழாக் கவிதைக்
கேட்கவா /

காலங்கள் புகையாகக் கரைந்த
போதிலும் /
ஞாலத்தில் நினைவுகளே நெஞ்சை
ஆளுமே !!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (20-Jul-22, 9:40 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 144

மேலே