பாவாடைத் தாவணியில் பார்த்த உருவமா
பாவாடைத் தாவணியில் பார்த்த உருவமா !!
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
பாவாடைத் தாவணியில் பார்த்த
உருவமா /
நாவாடி விளையாண்ட நாட்கள்
திரும்புமா /
கூவாத காலமது மீண்டும்
விடியுமா /
கூறாத கதைகளெலாம் கேட்க
முடியுமா /
காக்கைக்கடி கடித்திடவே பற்கள்
துடிக்குதா /
கரும்பலகைக் கவிதைகளில் கண்கள்
பணிக்குதா /
விளையாட்டுத் திடல்களிலே வீரம்
காட்டவா/
களைகட்டும் ஆண்டுவிழாக் கவிதைக்
கேட்கவா /
காலங்கள் புகையாகக் கரைந்த
போதிலும் /
ஞாலத்தில் நினைவுகளே நெஞ்சை
ஆளுமே !!
-யாதுமறியான்.