கோச லம்புனை ஆற்றணி கூறுவாம் - கலி விருத்தம்

கலி விருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)

முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்; விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12 எழுத்தெண்ணிக்கை தானே வரும்! 2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்; விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு; (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

ஆச லம்புரி ஐம்பொறி வாளியும்
காச லம்பும் முலையவர் கண்எனும்
பூச லம்பும், நெறியின் புறம்செலாக்
கோச லம்புனை ஆற்றணி கூறுவாம் 1 ஆற்றுப் படலம், பால காண்டம், கம்பராமாயணம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Jul-22, 7:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே