என்னை மயக்கியதென்னடி கண்ணே 555
***என்னை மயக்கியதென்னடி கண்ணே 555 ***
என்னுயிரே...
என்னை
கண்டதும் ஓடிவந்து...
என்னை கட்டியணைத்த
அந்த நிமிடம்...
இன்பத்தில் படபடத்த
என் இதய துடிப்பை...
உன்
மார்பினில் உணர்ந்தாயா...
வீசிய வெப்பக்காற்றும்
வாடைக்காற்றாக வீசியதடி...
என்
கன்னத்தின் ரோமங்கள்...
உன் கன்னத்தை
நெருங்கி உரசியதில்...
வலியில்
சிணுங்கினாயோ உயிரே...
உன் விழியோடு
நேருக்கு நேர் பார்க்கும்...
திறன் எனக்கு
இல்லையடி மானே...
பட்டுரோசா வண்ண சேலையில்
என்னை மயக்கியதென்னடி கண்ணே...
உன் மாம்பழ நிற மேனியில்
எத்தனை எத்தனை மச்சங்கள்...
உன் அழகை கண்டு திருஷ்டியாக
பிரம்மனே வைத்துவிட்டானோ உனக்கு...
உன் மடியில்
தலைவைத்து உறங்க ஆசை...
அதிகாலைவரை அல்ல
என் ஆயும் முடியும் வரை...
உயிரில்
கலந்த என் உறவே...
மீண்டும் உன்
தரிசனம் நேரில் எப்போது...
காத்திருக்கிறேனடி
கண்மணியே காதலோடு நான்.....
***முதல்பூ.பெ.மணி.....***