ஆராயிரங் கவிதை கண்டத் தமிழ்ப் பித்தன்
நேரிசை வெண்பா
ஆராயி ரங்கவி (ஆ)யாற்றிய ஆச்சாரி
ஆராயி னுங்கீழாம் ஐயர்க்கு --- சாராரிவ்
விஞ்சானி அஞ்சானம் விட்டதில்லை ஒன்றையும்
கொஞ்சும் அழகு சொகுசு
ஆச்சாரி = ஒன்று சேர்த்து அழகு செய்பவன் ஆச்சாரி
ஆசு = சேர்ப்பது
ஆறாயிரத்து முன்னூற்று அறுபத்தெட்டுக் கவிதை சமர்ப்பித்த விஞ்சானி வாசுதேவன் தேசிகாசாரி
தமிழ் பித்தன் அவர்கள் தொடாமல் விட்ட பிரிவு ஒன்றுமில்லை . அவரை இங்கு பாராட்டுகிறேன்
அவர் தொண்டு சிறக்க பல்லாண்டு வாழ்வென்று வாழ்த்துகிறேன். வாழ்க
......