அடைத்திருந் துண்டொழுகும் மாக்கட்கு அடைக்குமாம் ஆண்டைக் கதவு - நாலடியார் 271

நேரிசை வெண்பா

நட்டார்க்கும் நள்ளா தவர்க்கும் உளவரையால்
அட்டது பாத்துண்டல் அட்டுண்டல்; - அட்ட(து)
அடைத்திருந் துண்டொழுகும் ஆவதின் மாக்கட்(கு)
அடைக்குமாம் ஆண்டைக் கதவு. 271

- ஈயாமை, நாலடியார்

பொருளுரை:

சமைத்துண்ணுதலென்பது, தம்மிடம் உறவு கொண்டோர்க்கும் கொள்ளாத விருந்தினர்க்கும் தமக்குள்ள பொருளளவினால் தாம் சமைத்ததைப் பகுத்துதவிப் பின் தாம் உண்ணுதலாகும்;

அவ்வாறன்றித் தாம் சமைத்ததைத் தமது வீட்டின் கதவையடைத்துக் கொண்டு தனியாயிருந்து தாமே உண்டு உயிர் வாழ்கின்ற மறுமைப் பயனற்ற கீழ்மக்கட்கு மேலுலகக் கதவு மூடப்படும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Aug-22, 10:25 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

சிறந்த கட்டுரைகள்

மேலே