பாராதி ஐந்துக்கும் பன்னுமதி தெய்வங்கள் - உண்மை விளக்கம் 7

திருநெறி 4 – திருவதிகை மனவாசகங் கடந்தார் அருளியது.
நேரிசை வெண்பா

பாராதி ஐந்துக்கும் பன்னுமதி தெய்வங்கள்
ஆரார் அயனாதி ஐவராம் – ஓரோர்
தொழிலவர்க்குச் சொல்லுங்கால் தோற்றமுதல் ஐந்தும்
பழுதறவே பண்ணுவர்காண் பார். 7

- உண்மை விளக்கம்

பொழிப்புரை:

பிருதிவி அப்பு தேயு வாயு ஆகாசம் ஐந்துக்குஞ் சொல்லப்பட்ட அதி தேவதைகள் பொருந்திய யாவர் எனின், முறையே பிரமாவும் விஷ்ணுவும் உருத்திரரும் மகேசுவரரும் சதாசிவரும் என ஐந்து பேராம், சொல்லுமிடத்து அவருக்கு ஒவ்வொரு தொழிலேயாம். அவர் சிருஷ்டி திதி சங்காரந் திரோபவம் அநுக்கிரகமாகிய ஐந்தும் குற்றமறச் செய்வார்களென்று அறிந்து கொள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Aug-22, 3:57 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 43

மேலே