அங்கி விரவிப் பார்வையிற் கண் உருவங் காணுமே - உண்மை விளக்கம் 12

திருநெறி 4 – திருவதிகை மனவாசகங் கடந்தார் அருளியது.
நேரிசை வெண்பா

வானிடமாய் நின்றுசெவி மன்னும் ஒலியதனை
ஈனமிகுந் தோல்கால் இடமாக – ஊனப்
பரிசம் தனைஅறியும் பார்வையிற்கண் அங்கி
விரவியுரு வங்காணு மே. 12

- உண்மை விளக்கம்

பொழிப்புரை:

ஆகாயத்தினிடமாக நின்று சுரோத்திரம் பொருந்திய சத்தத்தை யறியும்,

வாயுவினிடமாக நின்று ஈனத்துவ மிக்க தொக்கு குறைவுடைய பரிசத்தை யறியும்,

தேயுவினிடமாக நின்று பார்வையினை யுடைய சட்சு உருவத்தை யறியும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Aug-22, 5:57 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே