தீயோரை உண்பிப்பது தீங்காம் – அறநெறிச்சாரம் 175
நேரிசை வெண்பா
கொடுத்துய்யப் போமாறு கொள்வான் குணத்தில்
வடுத்தீர்த்தார் உண்ணிற் பெறலாம் - கொடுத்தாரைக்
கொண்டுய்யப் போவார் குணமுடையார் அல்லாதார்
உண்டீத்து வீழ்வார் கிழக்கு 175
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
துறவு மெய்யுணர்வு அவாவின்மை முதலிய குணங்களையுடையார் தமக்கு உண்டி முதலியன உதவினாரையும் பிறவிப் பிணியின் நீக்கத் தாமும் நீங்குவர்,
அக்குணங்களில்லாதவர்கள் பிறர் கொடுப்பதை உண்டு தம்மை உண்பித்தாரையும் இழுத்துச் சென்று நரகிடை வீழ்த்துத் தாமும் வீழ்வர்;
ஆதலால், இல்லற நெறிக்கண் நின்று ஈகையால் உய்யும் நெறியை அடையக் கருதுகின்றவன் குற்றமற்ற குணத்தினையுடைய துறவிகளை ஊட்டின் அதனை அடையலாம்.
குறிப்பு: கிழக்கு - பள்ளம்; ஈண்டு நரகம்; ஈர்த்து என்பது ஈத்து என இடைக் குறைந்து