உயிர் போகும்போதும் ஆசைகள் தொடர்வதென்ன

இந்த கவிதை பாடல் , தொகையறா தொடங்கி கடைசி வரை "வீடுவரை உறவு வீதிவரை மனைவி" என்ற பழைய சினிமா தத்துவப்பாடலின் மெட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

தொகையறா

வாழ்க்கையின் அர்த்தம் என்ன
மனிதனின் வேடம் என்ன
காசிலே கடவுள் என்ன
சாதனை புரிந்ததென்ன
துடிதுடித்து உயிர் போகும்போதும்
ஆசைகள் தொடர்வதென்ன!

பல்லவி

பள்ளிலே படிப்பு
வாலிபத்தில் துடிப்பு
வாழ்க்கையிலே தவிப்பு
கடைசியிலே எரிப்பு
கடைசியிலே எரிப்பு!

(பள்ளிலே படிப்பு)

சரணம்

பள்ளிக்கூடம் போனோம்
கும்பலுடன் கோவிந்தா
காதலிலே புகுந்தோம்
பணமும்தான் கோவிந்தா
பணமும்தான் கோவிந்தா!
(பள்ளிலே படிப்பு)

சரணம்

தனிவாழ்வில் சாதனை
வாழ்க்கையில் வேதனை
உடல் படுத்தும் பாட்டினை
சொல்வதற்கு யோசனை
சொல்வதற்கு யோசனை !
(பள்ளிலே படிப்பு)

சரணம்

தந்தை தாய் செய்ததை
நாமும் செய்து போட்டோம்
சாவதற்கு முன்பே
பலதடவை செத்தோம்
வேறு என்ன கண்டோம் !

பள்ளிலே படிப்பு
வாலிபத்தில் துடிப்பு
வாழ்க்கையிலே தவிப்பு
கடைசியிலே எரிப்பு
கடைசியிலே எரிப்பு!

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (1-Oct-22, 4:55 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 209

மேலே