நீயே என் உயிர், பொருள், ஆவி - புதுக்கவிதை
என் அருமைக் காதலியே,
உன் அருமை நானறிவேன்;
நீ வரும் போதெல்லாம் உன்னுடன்
கொண்டு தரும் மகிழ்ச்சியையும்
நானறிவேன்;
நீயே என் உலகம்;
நான் கொண்டுள்ள காதலை
இன்னும் நீ உணரவில்லை என்றாலும்,
நீயே என் வாழ்வில் பெற்ற பெரும்பேறு
என்று உன்னை உணரச் செய்வேன்;
உன் காதலைப் பெற
காத்திருப்பேன், காலமெல்லாம்
காத்திருப்பேன், நீ என்னைப்
புரிந்து கொள்ளும் வரை;
நீயே என் உயிர், பொருள், ஆவி.