சொன்னாலும் புரியாது சுயமாவும் தெரியாது - அறுசீர் ஆசிரிய விருத்தம்

சொன்னாலும் புரியாது சுயமாவும் தெரியாது!
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 /.மா தேமா)
(1, 5 சீர்களில் மோனை)

சொன்னாலும் புரியாது சுயமாவும் தெரியாது
..சூன்ய ஞானம்;
தன்சொல்லே சரியென்று தப்பிதமாய் வாதாடுந்
..தத்தி என்பேன்!
அன்றாடங் கூறுவது தப்பென்றே சுட்டிடினும்
..அத்த வற்றைத்
தன்குற்றம் என்றறியாத் தற்குறியை என்னென்பேன்
..தவிப்பில் நின்றே!

– வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Nov-22, 8:00 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 83

மேலே