கலைஞருக்கு சமர்ப்பணம்

முத்தமிழ் கலைஞர்
முதலில் அவர் கவிஞர்
தமிழ் அவர் சுவாசம்
அவர் விடும் மூச்சிலும் வீசும்...

அவர் சொல்லாத கவிதை இல்லை
அவர் கவிதையின் சாரல் இன்றி எந்த கவிஞனும் இல்லை

கண்டிப்பாய் தான் வளர்த்தார் நம் தமிழை
அவர் முன்னே தமிழ்தான் வரும் கண்டிப்பாய்...

அவரின் அகவை தொண்ணொரு அவர் பாடும் தமிழோ என்றும்
பதினாறு...

கலைஞரின் கைவண்ணம் பராசக்தியில் வசனமாய் மின்னும்...

நெஞ்சுக்கு நீதி சொன்னவர்
சொல்லால் மக்கள்
மனதை வென்றவர்...

காலத்தால் அழியாத
புகழ் கொண்டவர்
தமிழ் போல் வாழ்வார்
தரணி உள்ளவரை...

எழுதியவர் : Rudhran (12-Nov-22, 10:45 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 41

மேலே