பேயடிக்கும்

பேயடிக்கும் என்பதெல்லாம்
வடிகட்டிய பொய்யடா//
சாதீயப்பேயே மனிதஉருவில்
ஆடுதென்பது மெய்யடா//
ஆதிக்க சக்திகளுக்கு
அடிபணியாமல் செல்லடா//
சாதிக்கப் பிறந்த நீ
தரணியை வெல்லடா//
அடக்கி ஆண்டவன்
நெஞ்சமெல்லாம் கல்லடா//
மடக்கி கேள்விகேளு
பகுத்தறிவில் அவன் பதரடா//
குட்டக்குனிந்தது போதும்
நெட்ட நிமிர்ந்து நில்லடா//
கற்றகல்வியே கைகொடுக்கும்
கவனத்தில் நீ கொள்ளடா//
நிமிர்ந்து வாழப்பழகியே
உயர்ந்து நீயும் செல்லடா//
ஒற்றுமையாய் வாழ்ந்துகாட்டி
நாட்டை உயர்த்தப் பாரடா//

அறந்தை ரவிராஜன்

எழுதியவர் : ரவிராஜன் (19-Nov-22, 1:14 pm)
சேர்த்தது : ரவிராஜன்
பார்வை : 138

மேலே