திருவடிகளை வணங்கும் தலையே சிறப்புடைத்து – அறநெறிச்சாரம் 204

நேரிசை வெண்பா

குற்றம் குறைத்துக் குறைவின்றி மூவுலகின்
அற்றம்* மறைத்தாங்(கு) அருள்பரப்பி - முற்ற
உணர்ந்தானைப் பாடாத நாவல்ல அல்ல
சிறந்தான்றாள் சேரா தலை 204

- அறநெறிச்சாரம்

*பூவுலகில் நற்ற

பொருளுரை: காமவெகுளி மயக்கங்களைக் கெடுத்து மூவுலகத்தினும் உள்ளவர்களது அச்சமனைத்தும் துடைத்து அவர்கட்கு அருள் செய்து, இயல்பாகவே எல்லாம் உணர்ந்த இறைவனை பாடாதன நா அல்லவாம், அவன் திருவடிகளை வணங்காதன தலைகளாகாது.

குற்றம் - மறுதலை மொழி நற்றம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Dec-22, 10:38 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 56

மேலே