திருவடிகளை வணங்கும் தலையே சிறப்புடைத்து – அறநெறிச்சாரம் 204
நேரிசை வெண்பா
குற்றம் குறைத்துக் குறைவின்றி மூவுலகின்
அற்றம்* மறைத்தாங்(கு) அருள்பரப்பி - முற்ற
உணர்ந்தானைப் பாடாத நாவல்ல அல்ல
சிறந்தான்றாள் சேரா தலை 204
- அறநெறிச்சாரம்
*பூவுலகில் நற்ற
பொருளுரை: காமவெகுளி மயக்கங்களைக் கெடுத்து மூவுலகத்தினும் உள்ளவர்களது அச்சமனைத்தும் துடைத்து அவர்கட்கு அருள் செய்து, இயல்பாகவே எல்லாம் உணர்ந்த இறைவனை பாடாதன நா அல்லவாம், அவன் திருவடிகளை வணங்காதன தலைகளாகாது.
குற்றம் - மறுதலை மொழி நற்றம்