ஒழுக்கமே உயர்வு
நித்தமுங் காமுறுங் கதைகள் பேசியே
முத்தமும் தானிட்டு இச்சை வளர்த்தே
சத்தமும் இல்லாமல் சங்கதி முடித்தே
மொத்தமுங் காணாமற்போனது காதலே.
காதலும் செய்வோர் காமமுங் கழிந்ததுமே
சாதலுங் கண்டேன் பூதமுறையான வாழ்விலே
ஒழுங்கிநீயும் வாழ்ந்தால் உயர்வும் வந்துசேருமே
மழுங்கிநீயும் வாழாதே மானிலத்தே.