மனிதனுக்கு சிறகு முளைத்தால்
எனக்கு மட்டும் சிறகு முளைத்திருந்தால்
ஆகாயம் வாயில் ஆங்காங்கே பறந்து சென்றிருப்பேன்...
பறவைகளோடு கூடி மகிழ்ந்து அவைகளின் பாஷைகளை கற்று இருப்பேன்...
பல மரங்களில் சரி பலாமரங்களிலும் சரி பழங்களைப் பறித்து சுவைத்திருப்பேன்...
நமது ஊர் போக்குவரத்து நெரிசலை பொருட்படுத்தாமல் விபத்தில் யாரும் சிக்கியிருந்தால் ஆம்புலன்ஸை விட வேகமாக அவரை தூக்கிச் சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்து உயிர் காத்திருப்பேன்...
மேகத்தை தாண்டி சென்று என் தேகத்தை குளிர்வித்து இருப்பேன்...
விண்ணில் பறக்கும் விமானத்தை மிக அருகில் சென்று ரசித்திருப்பேன்...
மண்ணில் நடக்கும் அநியாயங்கள் என் கண்ணுக்கு தென்பட்டால் காவல் உளவாளியாக ஆகி
கயவனுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்திருப்பேன்...
பாஸ்போர்ட் இல்லாமலே பல நாடுகளுக்கு பறந்து சென்று இருப்பேன்...
உலக அதிசயங்களை எல்லாம் ரசித்து மகிழ்ந்திருப்பேன்...
அரிய வகை மூலிகைகள்
அமேசான் காடுகளில் கிடைக்கிறதா என்ற உண்மையை அறிய ஆங்கே சென்று இருப்பேன்
கடவுளை தரிசிக்க கோவிலில் படிக்கட்டு ஏறி செல்லும் பக்தர்கள் மத்தியில் நான் பறந்து சென்று அங்கு கடவுளை தரிசித்து வந்திருப்பேன்...
அத்தியாவசிய பொருட்களுக்கு அவசரம் என்பவர்களுக்கு நான் பறந்து சென்றே பார்சல் சர்வீஸ் செய்திருப்பேன்...
கூட்டம் போட்டு வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள் முகத்தில் என் எச்சத்தை உமிழ்ந்திருப்பேன்...
மனிதனாகிய எனக்கு சிறகு முளைத்திருந்தால் இன்னும் இன்னும் நிறைய ஏகப்பட்ட எனது ஆசைகளை நிறைவேற்றி இருப்பேன்...