பொய்யும் புரட்டும் வெல்லும்

பொய்யும் புரட்டும் வெல்லும் - அது
புரிதலின்றி செல்லும்
வீணாய் வாயை மெல்லும் - அது
தானாய்த் தன்னை கொல்லும்

அடுத்தவர் உழைப்பை உண்ணும் - அது
கெடுத்தவர் கையை பின்னும்
படுத்தவர் மீது நடக்கும் - அது
படித்தவர் என்றே மிடுக்கும்

தலையை ஆட்டி நடிக்கும் - அது
வலையை நீட்டி பிடிக்கும்
களையை ஊற்றி வளர்க்கும் - அது
குளையில் ஏறி மிதிக்கும்

பாலாய்ப் பல்லைக் காட்டும் - அது
வேலாய் சொல்லைத் தீட்டும்
முதுகுக்குப் பின்னால் பேசும் - அது
கதவுக்குப் பின்னால் ஏசும்

நிறத்தை அறிந்து வாழ்வோம் - தமிழ்
அறத்தை அறிந்து வாழ்வோம்
சிரத்தை அறிந்து உய்வோம் - துணிந்து
சிறுமையின் தலையைக் கொய்வோம்.


--- நிலாசூரியன் தச்சூர்

எழுதியவர் : நிலாசூரியன் தச்சூர் (28-Dec-22, 9:06 pm)
சேர்த்தது : நிலாசூரியன்
பார்வை : 49

மேலே