நானா

விழியை சுருக்கும்
இமையின் வழி
கோபம் கண்டு
பணியாமல் நானா?
திட்டும் போதும்
தலை தூக்கா
நிலை கொண்டு
நிற்காமல் நானா?
கண்ணீர் கோர்த்து
தோளில் சாயும்
உன் காதலை
ஏந்தாமல் நானா?
சளைக்காமல் சமையல்
ருசி கூட்டும்
வெண்ணிற கைகளில்
முத்தமிடாமல் நானா?
அமர வைத்து
ஆவி பறக்க
தோசை ஊற்றி
ஊட்டாமல் நானா?
தாய்மை ஏற்று
கைவிரல் பிடித்து
ஈருயிர் சுமக்க
இணையாமல் நானா?

எழுதியவர் : (29-Dec-22, 4:33 am)
சேர்த்தது : நிலவன்
Tanglish : NANA
பார்வை : 64

மேலே