94 பெண்கட்கும் கல்வியே பெருந்துணை ஆகும் – மாதரைப் படிப்பித்தல் 1

கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

கல்வியே அறவழி காட்டும் ஆண்மகன்
செல்வழி யறிந்திடான் வித்தை தேறுமுன்
அல்வளர் கூந்தலார் அறிய நூலின்றி
நல்வழி யுணர்ந்ததில் நடக்கற் பாலரோ. 1

– மாதரைப் படிப்பித்தல், நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”யாவர்க்கும் கல்வியறிவே நல்வழி காட்டும். ஆண்மகனும் கல்வி கற்று நல்லது கெட்டதை அறிவதற்கு முன், செல்லக்கூடிய நல்வழி அறியமாட்டான்.

அப்படி இருக்க இருள் போன்ற கரிய கூந்தலை உடைய பெண்கள் கல்வி கற்காமல் நல்வழி அறிந்து அதன்படி நடக்க இயலுமா?” என்று பெண்களுக்கும் கல்வி மிக அவசியம் என்று இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே இப்பாடலாசிரியர் தெரிவிக்கிறார்.

கல்வி - படிப்பு. வித்தை - கல்வி. அல் - இருள். வளர் - போன்ற.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Dec-22, 7:39 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே