65 அருளில்லாத நெஞ்சத்தான் ஆசான் ஆகான் - பொய்க்குருவின் தன்மை 1
கலி விருத்தம்
(புளிமா புளிமாங்கனி கூவிளம் கூவிளங்காய்)
திருடன் பொருட்காவல னாதலுஞ் செல்வழிக்குக்
குருடன் குருடன்றனை யேதுணைக் கொள்ள(ல்)போலும்
இருடங் குளமாந்தரை வான்கதி யேற்றவென்னா
அருடங் கியநெஞ்சமி லான்குரு வாயவாறே! 1
- பொய்க்குருவின் தன்மை, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”கள்ளனை பொருட்களைக் காக்கும் காவலனாக வைப்பதும், பார்வை அற்றவன் தான் செல்லும் வழிக்கு இன்னொரு பார்வையற்றவனையே துணையாக அமைத்தலும் பயன் இல்லாதது போல, அருள் நிறைந்த நெஞ்சம் இல்லாதவன் ஆசானாய் அமைவது அறியாமை நிறைந்து உள்ள மக்களை இறைநிலைக்குக் கொண்டு செல்வது இயலாததாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
இருள்-அறியாமை.