நாட்டுப்புற பாட்டழகே

🌻🌻"கரகம் எடுத்து ஆடி வந்தோம் !
            நாட்டுப்புற கலை அழக சொல்லி பாடி வந்தோம் !
           நடனமாடி ஆடி வந்தோம் !
மக்கள் கூட்டத்த நாலாபக்கமும் சேக்க கூட வந்தோம் !
           நாட்டுப்புறகலைகளுக்கு நல்ல வழிவகை காட்டுங்கன்னு ...
          எங்க இனம் சேராதா ?
          உங்க மனம் மாறாதா ?
          மறுதலிக்க வேணாமுங்க
          மாத்திக்கலாம் எல்லாம் நல்ல
          வாரி அணைக்க வாரீகளா ?
          வணக்கம் சொல்லி பாடுவீகளா ?
          மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு கயிறு கட்டி காத்துக் கிடந்த மக்கள் கூட்டமுங்க
          மல்லுக்கட்டி மண்டியிட்டு கத்திக்கிட்டு வர வேணாமுங்க"🌻🌻

எழுதியவர் : சு.சிவசங்கரி (31-Jan-23, 4:38 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 348

மேலே