நாட்டுப்புற பாட்டழகே
🌻🌻"கரகம் எடுத்து ஆடி வந்தோம் !
நாட்டுப்புற கலை அழக சொல்லி பாடி வந்தோம் !
நடனமாடி ஆடி வந்தோம் !
மக்கள் கூட்டத்த நாலாபக்கமும் சேக்க கூட வந்தோம் !
நாட்டுப்புறகலைகளுக்கு நல்ல வழிவகை காட்டுங்கன்னு ...
எங்க இனம் சேராதா ?
உங்க மனம் மாறாதா ?
மறுதலிக்க வேணாமுங்க
மாத்திக்கலாம் எல்லாம் நல்ல
வாரி அணைக்க வாரீகளா ?
வணக்கம் சொல்லி பாடுவீகளா ?
மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு கயிறு கட்டி காத்துக் கிடந்த மக்கள் கூட்டமுங்க
மல்லுக்கட்டி மண்டியிட்டு கத்திக்கிட்டு வர வேணாமுங்க"🌻🌻