நிஜம் நிழலானது

ஏழு ஸ்வரங்களில்
மல்லிகை மணம் வீசி வந்த
பெண் குயிலே
பூலோத்தில் பாடியது போதுமென்று
ஓய்வு எடுக்க சொர்க்கத்திற்கு
பறந்து சென்று விட்டாய்

கலை வாணியே
இசையின் ராணியே
இலக்கணம் மாறாமல்
பாடல்களை பாடி
உந்தன் நிஜ பெயரான
கலை வாணிப் போல்
வாழ்ந்தாய் மண்ணுலகில்
வானுலகில் பாடி
ஜெயம் படைத்திட
வாழ்த்தி வணங்குகிறோம்

நிழல் நிஜமானது என்பார்கள்
ஆனால்..
இன்றோ நிஜமே நிழலானது...!!
கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (5-Feb-23, 3:19 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 388

மேலே