உலக நீதி-நியதியா
உலக நீதி-நியதியா?
'ஏம்பா ! நேசனல் ஜியோகிராபிக் சேனலில் ஒரு பெரிய எருமை மாடு, அதை 10 சிங்கங்கள் போராடி உண்ணுகிறதே? இதைப் பார்க்கும் போது பயம்மா இருக்கிறது -சிங்கம் ரொம்ப மோசம்பா !? சரிதானே'
ஏழு வயது பையன் கேள்விக்கு பதில் சொல்லும் நிர்ப்பந்தத்தில் இருந்தேன்.
அதற்காக ''யூ டியூப் " சேனலில்
'prey vs Predator ' ஐ search செய்து எடுத்து என் மகனை முழுவதுமாக பார்க்கச் சொன்னேன்.
அதில் அங்குளம் அங்குளமாக ஆங்கிலத்தில் சதுப்புநிலம், மழை வருகை, அடர்ந்த புல் வெளிகள், பசுமையின் வரவு, எருமைகளின் அணி வகுப்பு, அவைகளின் மேய்தல் என பின்னோட்டமாக தமிழில் ஒலி நாட ஓடிக்கொண்டு இருந்தது.
திடிரெண்டு ஒரு பீடுகை, எறுமைகளின் பதற்றம் ,திக்குத் தெரியாமல் சிதறிய காட்சிகள் என்று ஓடிக்கொண்டு இருந்தது.
அதில் ஒரு எருமை தனியாக மாட்டிக்கொள்ள, அதனை மற்ற சிங்கங்கக் கூட்டம் உண்டு உணவாவாக கொண்டது.
என் கேள்விக்கு இப்போது என் மகன் பதில் கூற ஆரம்பித்தான்,
சிங்கம் எத்தனை- 7 to 10.
எருமை 40 to 50,
அப்போ எது ஜெயிக்கும்;
எருமை - என் ஜெயிக்கவில்லை?
அது ஒடுகிறது ; பயப்படுகிறது.
எதற்காக - உயிருக்காக,
ஏன் பயப்பட வேண்டும்?
சிங்கத்தின் பற்கள் 'கூர்மையாக இருக்கும்'-கிளித்துவிடும்.
அப்படியா ? எருமைக்கு ஒன்றும் இல்லையா?
என்ன இல்லை: இதோ பார்!
கூர்மையான கொம்புகள், முட்டி உதைத்தால் தாங்கக் கூடிய பரந்த நெற்றிகள்;
இருந்தாலும் 5 ல் 1 முறை சிங்கம் ஜெயிக்கிறது.
அப்படி ஜெயிக்கவில்லை என்றால் , சிங்கம் இறந்துவிடும். இல்லாமலே போய்விடும்.
அய்யோ பாவம் சிங்கம் !
ஆக அது உணவாகச் சாப்பிடுகிறது. "வேட்டை" என்பது விளையாட்டு அல்ல, அப்படியா ! சிந்தித்தான் - என் பையன்.
இது இயற்கையின் நீதி.
'எருமைகள் ஒன்றாக மேயும்; அதைப் பிரித்து பந்தாட சிங்கம் சூழ்ச்சி செய்யும்'.
"சூழ்ச்சி சில சமயம் பலிக்கும்."இப்படியாக நான் சொல்லிக் கொண்டு போக,
எதிரே , News7ல் ரஷ்ய உக்ரேன் போரில் இறந்தவர்களின் சடலங்கள் தெரு வீதியில் கேட்பார் அற்று கிடப்பதையும் பார்த்தான்.
அப்ப இது :-
மனிதர்கள் , விசித்திரமானவர்கள்; இயற்கையை மீறுபவர்கள். மீறித்தான் பார்ப்போம் என்று சூழ் உரைப்பவர்கள்.
இப்படித்தான் அரசர்கள், அரசுகள் தங்களை சிங்கங்களாக நினைத்து மக்களை ஆளுகின்றனர்.
அய்யோ பாவம் என்றான் என் பையன்- ஆமாம் என்றேன் நான்.
அடுத்து வருவது
சீன- தைவான் - போர் மேகம்.
"கட் "செய்தேன் நான்.