செய்ந்நன்றி யறிதல் 3 - இன்னிசை வெண்பா

இன்னிசை வெண்பா

எங்கிருந்தோ வந்தாரே இக்கட் டிலுதவி
பங்கமின்றித் தந்தாரே கன்னியப்பா - அங்கு
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது. 11:3

– வ.க.கன்னியப்பன்

குறிப்பு:

1961 ல் மருத்துவக் கல்லூரியில் சேர கர்நாடக மாநிலத்திலுள்ள மணிப்பால் என்ற ஊருக்கு போதனூர் - மங்களூர் ரயிலில் சென்றபோது அறிமுகமான ஒரு நண்பர் உடுப்பி வரை வந்து Type writing institute நடத்தி வந்த திரு.வாசுதேவன் என்ற பெரியவரிடம் அறிமுகப்படுத்திச் சென்றார். அறிமுகம் செய்தவரை அதன்பின் பார்க்கவில்லை. அன்றைய நிலையில் capitation fees ரூபாய் 3000 மட்டுமே. வேறு எந்தச் செலவுமின்றி அதே ஆண்டில் எனக்கு இடம் கிடைக்க எந்த பிரதிபலனும் இன்றி திரு.வாசுதேவன் உதவி செய்தார்.

உடுப்பி வரை வந்து உதவிய நண்பர் செய்த உதவி கடலினும் பெரிது என்பது சொல்லாமலே விளங்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Feb-23, 9:57 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

சிறந்த கட்டுரைகள்

மேலே