404 பிறர்க்குதவி செய்வோர் பேரின்பம் பெறுவர் - கைம்மாறு கருதா உதவி 22

கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

காமமே வின்பங்கள் கணத்தி னீங்கிப்பின்
தீமையே விளைத்திடும் பிறர்க்குச் செய்கின்ற
சேமநல் லுதவியாற் சேரு மின்பந்தான்
நீமவீட் டின்பென நிகரு மற்றதே. 22

- கைம்மாறு கருதா உதவி, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”தகாத ஆசையால் ஏற்படும் இன்பங்கள் இமைப்பொழுதில் நீங்கிப் பின் துன்பத்தையே ஏற்படுத்தும். பிறர்க்குச் செய்யும் நன்மை பயக்கும் உதவியால் நாம் பெறும் இன்பம் ஒளி பொருந்திய பேரின்ப வீட்டிற்கு ஒப்பானதாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

காமம் மேவும் - தகாத ஆசையால் ஏற்படும். சேமம் - நன்மை. நீமம் - ஒளி; பேரின்பம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Feb-23, 8:55 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 45

மேலே