தனிமையில் அவள் புலம்பல்
வீசும் தென்றலும் தீப்போல் சுட்டதடா
வீசும் வான்மதி தண்ணொளியும்
மலரும் மல்லிகையில் வாசம் இல்லை
கூவும் சோலைக்குயில் இசையில் நாட்டம்
இல்லை என்பவை மனதிற்கு அது
வேண்டுவதெல்லாம் உந்தன் உறவே
என்செய்வேன் தனிமையில் என்னை
தவிக்க விட்டு எங்கு சென்றாயோ என்
தலைவா வாவா என்னை வாழவைக்க