பனிப்பகை

இளங்காலை பொழுதில்
குருதிவழிய குறும்புடன்
புன்னகைக்கும் புத்தம்
புதியவன் அவன்...

உச்சிப் பொழுதில்
உச்சி வானில்
உக்கிரமாக உறுத்து
விழிப்பான் அவன்...

மாலைப் பொழுதில்
மஞ்சள் வானில்
மயக்கும் மங்களமாக
மிளிர்வான் அவன்...

இரவுப் பொழுதில்
இன்பக் கனவோடு
இதமாய் உறங்கி
மீண்டும் குறும்புடன்
புன்னகைப்பான் அவன்...

ஆர்வம் குன்றாது
அயராமல் உழைக்கும்
உழைப்பாளி அவன்...

எழுதியவர் : கவிபாரதீ (11-Apr-23, 8:47 am)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 93

மேலே