யாரும் குலக்குல வண்ணத்த ராகுப - பழமொழி நானூறு 340

நேரிசை வெண்பா

ஓரும் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்
தேரும் திறமரிதால் தேமொழி! - யாரும்
குலக்குல வண்ணத்த ராகுப; ஆங்கே
புலப்புல வண்ணத்த புள். 340

- பழமொழி நானூறு

பொருளுரை:

தேன் போன்ற சொற்களை உடையாய்! ஒருவரது உள்ளத்தின் தன்மை ஆராய விரும்பும் ஒருவரால் ஆராயும் திறம் இல்லை;

நிலந்தோறும் தாம் வாழும் நிலத்திற்குத் தக்க தன்மையாயிருக்கும் புட்கள் அதுபோல, மக்கள் யாவரும் குலங்கள் தோறும் அவ்வக் குலத்திற்குரிய தன்மையை உடையவராய் இருப்பார்கள்.

கருத்து:

ஒருவரது குலத்தால் அவரது குணம் அறியப்படும்.

விளக்கம்:

ஒருவருடைய குணங்களை ஆராய்ந்து கண்டறிய முடியாது. அவரது குலங்கொண்டே குணம் அறியப்படும் என்பதாம். ஆகவே,குலமே தம்மையுடையாரது குணத்தை அறிவுறுத்துவதாம்.

'புலப்புல வண்ணத்த புள்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Jun-23, 5:27 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35

சிறந்த கட்டுரைகள்

மேலே