பெண்ணினத்தை இன்றே காப்போம்

பெண்ணினத்தை இன்றே காப்போம்

மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் தோழியுடன் உட்கார்ந்து தொலைக்காட்சியை
பார்க்க டெலிவிஷனை ஆன் செய்தேன். முதல் செய்தியாக வந்தது என்னை நிலை குலைய வைத்தது.
ஆரம்ப பள்ளி கூடத்தில் உள்ள ஆசிரியர் சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டார்.அவரை
காவல் துறை கைது செய்தது என்ற தலைப்பு செய்தி தான் அது. அவள் வயது ஐந்து என்றவுடன்.
மேலும் ஒரு அதிர்ச்சி. உலகம் நாகரீகத்தில் வளர்ந்தாலும் பாலியியல் தொல்லைகள் அதிகரிக்க
ஆரம்பித்து வயது வித்தியாசம் இல்லாமல் நடக்கிறதே என நானும் என் தோழியும் ஒருவரை
ஒருவர் பார்த்துக் கொண்டோம். பல ஆண்டுகளாக அலுவலகத்திலும் வேலை தேடி போகும்
பெண்களிடம் நடக்கும் சில செய்திகள் நம்மை உலுக்கிக்கொண்டிருந்தாலும்,அவை யாவையும்
பருவம் அடைத்த பெரிய பெண்களிடம் நடந்தது அவர்கள் எப்படியோ தங்களை காப்பாற்றிக்
கொண்டனர் என கூறிக் கேட்டிருக்கிறோம் . குழந்தைகளிடம் நடப்பது நம் அடிவயிற்றை
பிசைந்து கலக்கியது.அந்த குழந்தையின் உடலும் மனநிலையும் எவ்வாறு பாதிக்கப்படும்
அவர்கள் தினமும் பயத்திலேயே உலகத்தை பார்ப்பார்கள். அவர்களின் எதிர்காலம் எவ்வாறு
அமையும் என்றெல்லாம் என் மனம் நினைத்து பதைத்திட டெலிவிஷனை அணைத்தேன்.
நெஞ்சம் படபடத்தது,பெண்ணை இறைவியாய் போற்றும் பாரதத்தில் அரங்கேறும் வன்
கொடுமைகளை கண்டு!
பெண்ணே இனியாவது உயிர்த்தெழு- எதற்காகக் காத்துக் கிடக்கிறாய்
கொச்சின் மாநகரத்தில் மிகவும் பிரபலமான ஜீவிதா குழந்தை கருத்தரிப்பு மையம் மற்றும்
குழந்தைகளுக்கான பிரத்தியேக மருத்துவமனை. மழலைச் செல்வத்திற்காக தவமிருக்கும்
தம்பதியினருக்கு அது கோவில். அந்த மருத்துவமனையில் வெற்றிச் சதவீதம் அதிகம்
என்பதாலேயே அங்கு மருத்துவரை சந்திக்க பலநாட்கள் முன்பே பதிவு செய்து கொள்ள
வேண்டும் கூட்டம் அலைமோதும். புகழ்பெற்ற மருத்துவர் கார்த்தியாயினி முன்
குழந்தைகளுக்காக ஏங்கும் இளம் தம்பதியினர் அமர்ந்திருந்தனர். அவர்கள் லிங்கபாலன் வயது
39 , பார்கவி வயது 33. திருமணம் முடிந்து எட்டு ஆண்டுகளாக குழந்தைக்காக தவிக்கும்
தம்பதிகள்.
பார்கவியின் மருத்துவ அறிக்கையைப் பார்த்த கார்த்தியாயினி "பார்கவி உங்கள் மருத்துவ
அறிக்கையைப் பார்க்கும்பொழுது ஒரு விஷயம் தெளிவாக தெரியுது. உங்களுக்கு கருத்தரிப்பதில்
எந்தவிதப் பிரச்சனையும் இல்லை. ஆனால் உங்கள் கர்ப்பப்பைக்கு அதை சுமக்கும்
வலுவில்லை".
இதைக் கேட்டதும் பார்கவியின் கண்களில் கண்ணீர் குளம் கட்டியது. அவள் கைகளை ஆதரவாக
பற்றிய லிங்கபாலன் கவலைப்படாதே என்று அவளுக்கு தன் கண்களால் ஆறுதல் கூறினான்.
அந்நியோன்யமான அந்த தம்பதிகளுக்கு கடவுள் ஏன் இப்படி ஒரு தாங்கமுடியாத குறையைக்
கொடுத்தான் என்று நினைத்த கார்த்தியாயினி "பார்கவி நீங்க கவலைப்படாதீங்க. இப்போ
இருக்கிற டெக்னாலஜியில் எவ்வளவோ முன்னேற்றங்கள் இருக்கு. அதனால நீங்க கொஞ்சமும்
கவலைப் பட அவசியமில்லை. உங்களுடைய கருப்பைக்கு வலுவில்லை.அவ்வளவுதான். அதற்கு
வலுவூட்டினால் நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்வது மிகவும் சாதாரண விஷயம். மத்தவங்களை விட
நீங்க கொஞ்சம் எக்ஸ்ட்ரா கேர்ஃபுல்லா இருக்கணும். சரியான ட்ரீட்மென்ட் எடுத்தா நீங்க குழந்தை

பெறுவதற்கு 100 சதவீத வாய்ப்பு இருக்கு என்று கூறி கொண்டிருக்கையில் மேசையில் இருந்த
தொலைபேசி சிணுங்கியது".
எடுத்து பேசிய கார்த்தியாயினி பதட்டமாக அறையை விட்டு வெளியில் வந்தாள். அவர் பின்னால்
லிங்கபாலனும் பார்கவியும் வந்தனர். வாயிலில் ஒரு பெண் குழந்தை குருதியில் நனைந்து
உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தது. குழந்தைக்கு முதலுதவி செய்ய ஆணை பிறப்பித்து
கொண்டிருந்தாள் கார்த்தியாயினி. சிறிது நேரத்தில்அக்குழந்தையயை ஐ. சி. யு வார்டுக்கு மாற்றினர்.
அங்கு இருந்த செவிலிப் பெண் அக்குழந்தையை மருத்துவமனையில் ஒப்புக் கொடுத்தவரிடம்
தகவல்களை அளிக்குமாறு கேட்டாள்.
"இந்த அப்ளிகேஷன் ஃபார்ம ஃபில் பண்ணி கொடுத்துடுங்க" என்றதும் தான் அம்மனிதன் சுய
உணர்வு பெற்று இவ்வுலகுக்கு வந்தான். இன்னும் கண்களில் அதிர்ச்சி கலையாதவன் சொன்ன பதில்
அங்கு உள்ள அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகியது . அந்த குழந்தை யார் என்றே தனக்கு தெரியாது
என்றும், வரும் வழியில் குப்பைத்தொட்டியின் பக்கத்தில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்த
குழந்தையை விட்டுச் செல்ல மனமில்லாமல் தான் தூக்கி வந்ததாகவும் கூறினான்.
இதைக் கேட்ட பார்கவியின் உள்ளம் குமுறிக்கொண்டிருந்தது.
" பாலனிடம் ஏன் நமக்கு கடவுள் இந்த மாதிரி ஒரு குழந்தையை கொடுக்கல. எனக்கு இப்படி ஒரு வரம்
கிடச்சா நான் அவளை பொத்திவச்சு பாதுகாத்து இருப்பேன்"
"பார்கவி கண்ட்ரோல் யுவர்செல்ப் வா நாம கிளம்பலாம்"
வேண்டாம் என்றும் மறுப்பாய் தலை அசைத்தவளை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அழைத்துச்
சென்றான் . அவனுக்குத் தெரியும் தன் மனைவி மனதில் என்ன நினைக்கிறாள் என்று. அவளுக்கு
தேவை அக்குழந்தை பிழைத்தது என்ற ஒற்றை வார்த்தை. ஆனால் அது சாத்தியப்படாத ஒன்று என்று
அவன் மனம் ஓலமிட்டது. குழந்தை இறந்தது என்ற செய்தி அவள் காதை எட்டினாள் அவள்
சுக்குநூறாக நொறுங்கிப் போவாள் என்று அறிந்ததால் அவளை வலுக்கட்டாயமாக அழைத்துச்
சென்றான். இவர்களின் உரையாடலை ஓரமாய் ஒரு அரூபம் நின்று பார்த்துக் கொண்டிருந்தது. அதன்
கண்களில் இருந்த ஏக்கம் துயரம் சொல்லில் அடங்காது. கண்களை துடைத்துக் கொண்டு அவர்களை
அரூபம் தொடர்ந்தது.
வீட்டிற்கு வந்தவள் கணவனின் தோள் மேல் சாய்ந்துகொண்டு தேம்பித் தேம்பி அழுதாள். பாலன்
எதுவும் பேசாமல் அவளை தோளில் சாய்த்து தலைகோதி ஆறுதல் அளித்தான். சொல்லும்
வார்த்தைகளில் இல்லாத ஆறுதல் மௌனமாய் லட்சம் வார்த்தைகளுக்கு சமானமாய் அவளுக்கு
ஆறுதல் அளித்தது.சிறிது நேரம் கழித்து தெளிவுற்றவள் பாலன் , நீங்க அலுவலகம் கிளம்பிப் போங்க.
நான் அழுது அழுது உங்களையும் கஷ்டப்படுத்துகிறேன்.
"என் செல்ல மண்டே! இப்படி அழுதழுது என் சட்டை ஃபுல்லா நனைச்சிட்டியே என பாலன் சொல்ல
இப்படி என்னை கூப்பிடாதீங்கன்னு எத்தனை தடவை உங்க கிட்டே சொல்லி இருக்கேன் என்று
அவள் செல்ல கோபம் கொள்ள அதைக் கண்டு தன் மனைவி இயல்புநிலைக்கு திரும்பி வந்து
விட்டாள் என்பதை நிம்மதி அடைந்தவன்
சரி சரி உன் பார்வையால் என்னை எரிச்சுடாதே! நேரமாச்சு நான் கிளம்புறேன் என்று கூறி அவளது
நெற்றியில் தன் இதழை பதித்து பிரியா விடையைக் கொடுத்து பிரிந்தான் பாலன்.
அவன் சென்ற பிறகு தலை சிறிது கனக்கவே சில மணி நேரம் உறங்கினாள். அவள் விழித்துப்
பார்க்கையில் எதிரே ஒரு பெண் குழந்தை அவளையே பார்த்துக் கொண்டிருந்தது. அந்நிகழ்வை அவள்
பிரமை என்று நினைத்துக் கொண்டிருக்கையில் அவள் காதில் விழுந்த அந்த மூன்றெழுத்து சொல்லில்
ஆயிரம் முறை பிறந்தாள்.தான் கேட்டது நிஜம்தானா என்று யோசிக்கையில் அவள் காதில் மீண்டும்

ஒலித்தது அவ்வார்த்தை. "அம்மா" என்று காதுக்குள் இனிமையாய் இறங்கிய வார்த்தை அடிவயிறு
வரை சென்று ஆயிரம் பட்டாம் பூச்சிகளை படபடக்க செய்தது. சொல்ல முடியாத மகிழ்ச்சியில் மூளை
வேலை செய்ய மறுத்தது.
யார் அந்த குழந்தை எப்படி வீட்டிற்குள் வந்தது என்ற ஆராய்ச்சி எதுவும் அவள் செய்யவில்லை.
அக்குழந்தையை வாரி அணைத்து முத்த மழை பொழிந்தாள். மலடி என்ற சொல்லால் ஆயிரம் முறை
மடிந்தவளுக்கு அம்மா என்ற ஒரு சொல் அவள் உயிர் வரை தீண்டி அவளை உயிர்த்தெழச் செய்தது.
அதன் பிறகு அவள் அக்குழந்தையின் உலகில் தன்னைத் தொலைத்தாள். அக்குழந்தைக்கு சாப்பாடு
ஊட்டி, விளையாடி, கதை சொல்லி மாய உலகில் சஞ்சரித்து கொண்டிருக்கையில் எப்படி அக்குழந்தை
வந்ததோ அதே மாதிரி மாயமாய் மறைந்தது. ஒரு நிமிடம் அவளுக்கு தான் கண்டது எல்லாம் கனவோ
என்ற எண்ணம் வந்தது. கனவு என்று நினைத்தாலும் எங்கோ நெஞ்சின் ஓரத்தில் தித்திக்கத் தான்
செய்தது. அதனால் அந்நிகழ்வை அவள் கணவனிடம் சொல்லாமல் புறக்கணித்து தனது அன்றாட
வேலைகளைக் கவனிக்கலானாள். ஆனால் இந்த நிகழ்வு தினமும் தொடர்ந்தது. இனிமை நிறைந்த
நிகழ்வை அன்று இரவு கணவனிடம் கூறினாள்.
"உனக்கு என்ன பைத்தியம் புடிச்சிருக்கா நீ சொல்றது எப்படி சாத்தியமாகும்"
"என்னை கடைசியில் நீங்களும் பைத்தியம்னு சொல்றீங்களே . ஏற்கனவே எனக்கு இந்த உலகம் மலடி
என்று அழகான பெயர் ஒன்றை கொடுத்திருக்கு" என்று மனத்தாங்கலாக கேட்டவளை என்ன சொல்லி
சமாதானப் படுத்துவது என்று தெரியவில்லை லிங்கபாலனுக்கு.
"என்ன வார்த்தை சொல்லி விட்டே பார்கவி . சரி விடு நான் நம்புறேன் உன்னை. நாளைக்கு நான்
லீவு போட்டுட்டு வீட்டில் இருக்கேன். என்ன நடக்குதுன்னு பார்ப்போம். மறுநாள் அலுவலகத்தில் லீவு
சொல்லிவிட்டு மனைவியுடன் ஆவலாய் எதிர்பார்த்திருந்தான். அவர்களுடைய ஆவலை
பொய்யாக்காமல் அக்குழந்தை வீட்டுக்குள் வந்தது. குழந்தையைக் கண்டவுடன் அவனுடைய
மூளையும் மரத்துத் தான் போனது. இருவரும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயினர். அன்று இரவு
தனிமையில் பார்கவி தன் கணவனிடம் "ஏங்க அந்த குழந்தையை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க"
என்று கேட்டாள்.
"நீ எப்படிக் ஒரு குழந்தைக்காக ஏங்கி தவிச்சியோ, அதே மாதிரி அந்த குழந்தையும் ஒரு அம்மாவுக்காக
ஏங்கி இருக்கு. அந்த குழந்தையோட ஆசை நிறைவேறாமல் இறந்ததால், அந்த குழந்தையோட ஆத்மா
உன்னை சுத்தி சுத்தி வருது. உன்னை அம்மாவென்று நம்புகிறது.
அவள் கண்களில் கண்ணீருடன் "இந்த குழந்தையே நமக்கு குழந்தையாக வந்து பிறந்தால் நல்லா
இருக்கும் பாலா இல்லையா என அவள் கூற .""நீ கவலைப் படாமல் தூங்கு. நாம் நினைத்தது
கண்டிப்பா நடக்கும்" என்று கூறி அவளை ஆறுதல் படுத்தி உறங்க வைத்தான். நாட்கள் அதன்
போக்கில் நகர பார்கவி ஒரு நாள் குழந்தையை கூட்டிக்கொண்டு முதன் முதலாக கடைத்தெருவிற்குச்
சென்றாள். அக்குழந்தை ஆசையாக கேட்ட பொம்மை விளையாட்டு சாமான்கள் அனைத்தையும்
வாங்கிக் குவித்தவள் தன் வயிற்றில் பிறந்த குழந்தையாகவே அதை நினைக்க ஆரம்பித்தாள்.
அப்போதுதான் அந்த விபரீதம் நடந்தது. எதிரில் வந்த ஒருவனைப் பார்த்து அந்த குழந்தை பயந்து
நடுங்கியது. பார்கவியின் கைகளைப் பற்றிக் கொண்டு "அம்மா வலிக்குது அம்மா வலிக்குது" என்று
கதறி துடித்தது. ஒருவழியாக வீட்டுக்கு அவளைக் கூட்டிக் கொண்டு வந்து குழந்தையை
ஆசுவாசப்படுத்தி என்ன நடந்தது என்று பொறுமையாக விசாரித்தாள். ஆனால் அவளுக்கு அதில்
கிடைத்த செய்தியோ அவளை மரித்துப் போக செய்தது. ஆம் அந்தக் கொடியவன் அக்குழந்தையை
கதறக்கதற துடிக்கத் துடிக்க பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி உள்ளான். அவன் தேவை முடிந்த

பின்னர் அக்குழந்தையயை தூக்கிச்சென்று குப்பைத் தொட்டியின் அருகே போட்டுவிட்டு சென்று
விட்டான். அந்த குப்பை தொட்டியைக் கடந்து சென்ற யாரோ ஒருவர் குழந்தையை
மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது.அந்த
மருத்துவமனையில் தான் பார்கவியை அந்த குழந்தை கண்டதாகவும் குழந்தைக்காக அவள் வடித்த
கண்ணீரை கண்டு அவள் பின்னாலேயே வந்ததாகவும் சொல்லியது.அக்குழந்தை இவை
அனைத்தையும் கூறியதை கேட்டதும் கதறி அழுத அவளைக் கட்டிக்கொண்டு ஆறுதல் படுத்தியது.
"எனக்கு இப்போ ஒன்றும் பயமில்லை அம்மா. அதான் நீங்க இருக்கீங்களே" என்று கூறிய ஐந்தே
வயதான குழந்தையை வாரி அணைத்து உச்சி முகர்ந்தாள். அப்போதே அந்த கொடூரனை கொன்று
புதைக்கும் ஆத்திரம் மனதில் எழுந்தது. சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தாள். அங்கு நிலவிய
அமைதியைக் குலைக்கும் வண்ணம் "அம்மா அந்த அண்ணாவை எனக்கு அடிக்கணும் போல இருக்கு"
என்றும் மழலையில் பேசிய அக்குழந்தையை கண்டு துக்கம் தொண்டையை அடைத்தது அவளுக்கு.
என்ன நினைத்தாளோ அவள் வாயில் இருந்து சொற்கள் தானாக உதிர்ந்தது.
"அவனைக் கொல்லும் உரிமை உனக்கு இருக்கிறது. போய் கொன்று விட்டே வா. உன்னை
என்னுடைய மணி வயிற்றில் சுமக்கும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்" என்று அவள்
கூறினாள். மறுநாள் காலைச் செய்தித்தாளில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் இறந்தார் என்று
அக்கொடியவனின் படத்துடன் வந்த செய்தியைக் கண்டு நிம்மதிஅடைந்தாள்.உலகிலேயே மிகவும்
கொடூரமான கொடுமையை அனுபவித்த ஒரு குழந்தைக்கு நியாயம் கிடைத்ததாகவே அவள்
நினைத்தாள் ஒருவேளை அக்குழந்தை அவள் வயிற்றில் வராமல் இருந்தாலும் இப்பொழுது
நிம்மதியாக நித்திரை கொள்வாள் பார்கவி.
பத்து தினங்கள் கழித்து அவள் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டது.
அவள் மனதில் அசரீரி ஒலித்தது "அம்மா நான் வந்து விட்டேன் உன்னுள். அவனைக் கொன்று
விட்டேன். நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன் உன் கருவில் இருந்து. உன் முகம் காணும் நாள்
எந்த நாளோ என்று ?"
அன்று இரவு தனிமையில் "குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் பார்கவி " என்றான் பாலா .
சிறிதும் யோசனையின்றி அவள் வாயிலிருந்து உதிர்ந்த பெயர் "இறைவி" யோசனையாய் பார்த்த
கணவனிடம் "இது ஒரு ஆரம்பமாக இருக்கட்டும் பாலா . என் குழந்தை அவளை சீரழித்தவனை காவு
வாங்கி விட்டாள். இனி ஒரு பெண்ணுக்கு இக்கொடுமை நடக்குமாயின் அவனை நாற்சந்தில் கழுவில்
ஏற்ற வேண்டும். அதற்கு என்னுடைய பெண் மரித்த பின்பும் நியாயம் கற்பித்து பிள்ளையார் சுழி
போட்டு விட்டாள்.
தற்காப்பிற்காக வன்முறையையும் கொஞ்சம் சொல்லிக் கொடுக்கலாம் பெண் சிசுவுக்கு அதன்
உயிரைக் காக்க
பெண்ணே நீ இன்றே ஒரு முடிவெடு, இந்த அரக்கர்களை எப்படி வதைக்கலாம் என்று
ஆம். உன் துகிலுரித்தவனின் உயிரை எடுத்து விடு, இனியாவது ஒரு விதி செய்வோம் நெஞ்சில்
ஈரமற்ற இந்த அரக்கர்களை வதைத்து, இல்லையேல் பெண்ணாய் பிறக்கும் பாவத்திற்காக கருவில்
இருக்கும் சிசுவும் மிஞ்சாது.
கொடும்பாவிகளே, மூர்க்கர்களே, வஞ்சகர்களே பிணம் தின்னும் கழுகுகள் கூட நகைக்கும் இந்த
மனித இனத்தை பார்த்து இறந்த சதைப் பிண்டத்தை தின்பது என் பிறவி குணம் மழலை மாறாத

குழந்தைகளைக் கூட சதைப் பிண்டமாய் பார்ப்பது உன்பிறவி குணமோ என்று நினைத்து
கொண்டு
மிக மிக ஈனச் செயலை செய்து உன்னை சுமந்தவளின் கருவறையையே களங்கப்படுத்தி
விட்டாயே
அவமானமாக இல்லையா
உன்னை விவரிக்க அகராதி கூட வார்த்தைகளற்று தவிக்கிறது காமப் பிசாசுகளே உங்களை
கொன்று புதைக்கும் ஆத்திரம் மனதில் எழுகிறது ஒன்று மட்டும் நினைவில் கொள்ளுங்கள், நீங்கள்
துயில் கொள்ள பூமித்தாயும் இடம் கொடுக்க மாட்டாள்.
மலரினும் மென்மையானவள் என்று வர்ணிக்கவும் வேண்டாம்
தேன் மொழியாள் எனக் கூறி பறைசாற்ற வேண்டாம்
புனிதமானவள் என்று பூச்சூடி பெயரிடவும் வேண்டாம்
சித்திரப்பாவை என்று வார்த்தைகளில் பேச வேண்டாம்
இறைவியாய் பாவித்து எங்களை பூஜிக்கவும் வேண்டாம்
மன அமைதியுடன் பெண்ணினத்தை வாழவிட்டால் போதும் .

மேற்கூறிய கதை ஒரு உண்மை சம்பவத்தை தழுவி
எழுதப்பட்டது பெயர்கள் மட்டும் மாற்றி அமைக்கப் பட்டுள்ளது.

எழுதியவர் : கே என் ராம் (22-Jun-23, 8:33 pm)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 112

மேலே